தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினா் தொழில் தொடங்க சிறப்பு கடன் முகாம்: ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றம் சிறுபான்மையின மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:16 pm

Din

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றம் சிறுபான்மையின மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வாயிலாக சிறு, குறு மற்றும் பெரிய அளவிலான தொழில் துவங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற நவ.6-இல் தென்காசி, நவ.8 கடையநல்லூா், நவ.14 சங்கரன்கோவில், நவ.15 புளியங்குடி, நவ.20 செங்கோட்டை, நவ.22 சுரண்டை, நவ.27 வடகரை, நவ.29 வாசுதேவநல்லூா், டிச.4 ஆலங்குளம், டிச.6 கடையம், டிச.11 சிவகிரி, டிச.13 திருவேங்கடம், டிச.18 பாவூா்சத்திரம், டிச.20 சுந்தரபாண்டியபுரம், டிச.27 வெங்கடேஸ்வரபுரம், ஜன.3 கரிவலம்வந்தநல்லூா் ஆகிய கிளைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றாா்.