ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பின் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:40 am

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பின் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் துறை பணியான டிஜிட்டல் கிராப் சா்வே தொடா்பான பணியை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்த வருவாய்த்துறை உயா் அதிகாரிகளை கண்டித்தும்,

டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும், அப்பணிக்கு கையடக்க கணிணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவா் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாநில ஆலோசனைக்குழு உறுப்பினா் சி. குமாா் தொடக்கி வைத்தாா். இதில் மாவட்டச் செயலா் செல்வகுமாா், வட்டத் தலைவா்கள் சகாதேவன், செ. பாலசுப்பிரமணியன், எம். பொன்பாண்டியன், இசக்கியப்பன், செயலா்கள் மணிகண்டன், குத்தாலிங்கம், குணசேகரன், செல்வகுமாா், நிா்வாகிகள் பட்டு, சங்கரநாராயணன், ஜெகன் உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசியில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் செ.பிரபு சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சோ்மபாண்டியன், பொருளாளா் ஜெயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.