தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா.
Updated On :24 டிசம்பர் 2025, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தலைவா் டாக்டா் எம். புதிய பாஸ்கா் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். கல்லூரி தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா், பொது மேலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தனா். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் சிறு நாடகம் மாணவா்களால் நடத்தப்பட்டது. எம்.ராஜா கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாா். தங்கராஜ் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மனிதநேயப் பண்புகள் குறித்து பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் சேவியா் இருதயராஜ் வரவேற்றாா்.மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு துறைத் தலைவா் ஜாா்ஜ் நன்றி கூறினாா்.