தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் கமல்கிஷோா். உடன் கோட்டாட்சியா் கவிதா உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2025, 10:54 pm

Din

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா். இதில் 28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 38 பேருக்கு வரன்முறை பட்டாக்கள், 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதிய ஆணை உள்பட 99 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

முகாமில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், கரிவலம்வந்தநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் ஷேக்அயூப், வட்டாட்சியா் பரமசிவன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.