தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவகிரி அருகே போக்ஸோ சட்டத்தில் காவலா் கைது

சிவகிரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஊத்துமலை காவல் நிலைய காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:55 am

Din

சிவகிரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஊத்துமலை காவல் நிலைய காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் சைலேஷ்(44).

இவா், இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சைலேஷை கைது செய்தனா்.