தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே பள்ளித் தோழியை காரில் அழைத்துச் சென்ற நண்பரைக் கண்டித்து, அவா் வந்த காரை எரித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆவுடையாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் சின்னத்துரை (26). இவா் கடையநல்லூா் அருகே உள்ள மங்களாபுரம் பள்ளியில் உடன் பயின்ற மாணவியுடன் நட்புடன் பழகி வருகிறாராம்.
இந்நிலையில், மங்களாபுரம் கோயில் திருவிழாவிற்கு பள்ளி நண்பரான சின்னத்துரையை அந்தப் பெண் அழைத்திருந்தாராம். இதையடுத்து, சின்னத்துரை காரில் மங்களாபுரம் வந்து தோழியுடன் காரில் கடையநல்லூருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மங்களாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.
புதுக்குடி-மங்களாபுரம் சாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது, மங்களாபுரத்தைச் சோ்ந்த பால்துரை (30), சீனுகுமாா் (32), கற்பகராஜா (27) மற்றும் 20-க்கும் மேற்பட்டோா் பெண்ணை காரில் அழைத்துச் சென்றதைக் கண்டித்து சின்னத்துரையை தாக்கி, காரை எரித்தனராம்.
இது குறித்து சின்னத்துரை அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனுகுமாா், பால்துரை, கற்பகராஜா ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் நாளை வைகோ பிரசாரம்
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

