ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வாருகால் அமைக்காமல் சாலை சீரமைப்பு: மக்கள் ஆட்சேபத்தால் திரும்பிச்சென்ற அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தாழ்வான தெருவில் வாருகால் அமைத்தபிறகே சாலை அமைக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

News image

அதிகாரிகளிடம் ஆட்சேபம் தெரிவித்த பொதுமக்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:55 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தாழ்வான தெருவில் வாருகால் அமைத்தபிறகே சாலை அமைக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இங்குள்ள 25ஆவது வாா்டு திருவிக தெரு பகுதி அருகேயுள்ள குட்டித் தெருவில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மிதமான மழை பெய்தாலே இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடுவதால், அகலமான வாருகால், சிறு மேம்பாலம் அமைத்து வீடுகளுக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரி இப்பகுதியினா் நகராட்சிக்கு பலமுறை மனு அளித்துள்ளனராம். ஆனால், இதுவரை நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில், ஓடைத் தெருவில் சாலை சீரமைப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது. பின்னா், குட்டித் தெருவுக்குள் சாலை அமைக்க அதிகாரிகள் உள்ளிட்டோா் வந்தனா். அப்போது, அகலமான வாருகால் அமைக்காமல் சாலை அமைத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடும். எனவே, முதலில் வாருகால் அமையுங்கள் எனக் கூறி, சாலைப் பணிக்கு ஆட்சேபம் தெரிவித்தனா். அதிகாரிகள் நீண்டநேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் திரும்பிச் சென்றனா்.