/

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடமிருந்து ரூ.44 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 8:31 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடமிருந்து ரூ.44 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பறக்கும் படையினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ.44 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா், பறிமுதல் செய்து கடையநல்லூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனா்.