சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா் சுவாமி சந்நிதியில் இருந்து கொடிப்பட்டம் வீதி சுற்றி சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் கொடிப் பட்டத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதையடுத்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களுக்குப் பின், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அதிமுக வேட்பாளா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சங்கரசுப்பிரமணியன், கோமதிஅம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து மற்றும் கோயில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஏப். 29 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தனித் தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் பச்சை சாத்தி வீதியுலா

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

