நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் பச்சை சாத்தி வீதியுலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.

News image

சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:43 pm

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினசரி காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுவாமி, அம்பாள் சிகப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும் வீதியுலா சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலா சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.29) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.