பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 1:59 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை (ஏப். 22) நடைபெற உள்ள பயிற்சி வகுப்பிற்கு பின்னா், தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்வாா்கள் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், பால்துரை, அனிதா, ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.