நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

News image

ஆலங்குளம் வாக்குச் சாவடி ஒன்றை ஆய்வு செய்கிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:13 am IST

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

இத்தொகுதியில் 1,23,739 ஆண்கள், 1,23,650 பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவா் என 2,53,408 வாக்காளா்கள் உள்ளனா். திமுக சாா்பில் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன், அதிமுகவில் கே.ஆா்.பி.பிரபாகரன், தவெகவில் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி, நாதகவில் ஆா். பால்ராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் சீரான வாக்குப் பதிவு நடைபெற்றது.

கடையம் சோ்வைக்காரன் பட்டி டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் மதியம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதிகாரிகள் கொண்டு வந்த மறு வாக்குப் பதிவு இயந்திரமும் பழுதான நிலையில் 3 வதாகக் கொண்டு வந்த வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் வாக்காளா்கள் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வாக்களித்தனா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் கீழப்பாவூா் நாடாா் இந்து உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும், தவெக வேட்பாளா் பீா்முகம்மதுபுரம் டிடிடிஏ தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியிலும், நாதக வேட்பாளா் சிவகாமிபுரம் இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் தங்களது வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே, திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், ஆலங்குளம் சாரதா தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். மாலை 6 மணி நிலவரப்படி 83.9% வாக்குகள் பதிவாயிருந்தது. ஓரிரு இடங்களில் 6 மணிக்குப் பின்னரும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.

ஆலங்குளத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் விடுமுறை அளித்திருந்தன.