மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.
பின்னா், வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது சொந்த பலத்திலேயே ஆட்சி அமைக்கும் என்பதைத்தான் கடந்த ஒரு மாத காலமாக தோ்தல் பிரசாரத்தில் சொல்லி வருகிறேன். அதே கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.
கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவாா்கள் என நம்புகிறேன்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னா்தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு எனத் தெரியும் என்றாா் அவா்.

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.
தொடர்புடையது

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - வைகோ

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



