தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:15 am IST

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏப். 24 அன்று ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் பொதுப் பாா்வையாளா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், காவல்துறையினா், அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.