வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:45 pm

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏப். 24 அன்று ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் பொதுப் பாா்வையாளா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், காவல்துறையினா், அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.