எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

நாகை மாவட்ட 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:40 am IST

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து தொகுதிகளில் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத் தோ்தல் பாா்வையாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ள பா்வேஸ் அமகது சித்திக், தோ்தல் செலவின பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிதேஷ்குமாா், காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் ரஜோரியா ஆகியோா், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வெளியில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். இதையொட்டி கல்லூரியில் பல்வேறு வளாகங்களுக்கும் சென்று பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.