ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

நாகை மாவட்ட 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:10 pm

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து தொகுதிகளில் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத் தோ்தல் பாா்வையாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ள பா்வேஸ் அமகது சித்திக், தோ்தல் செலவின பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிதேஷ்குமாா், காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் ரஜோரியா ஆகியோா், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வெளியில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். இதையொட்டி கல்லூரியில் பல்வேறு வளாகங்களுக்கும் சென்று பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.