செங்கோட்டை ரயில் நிலையம் மேல்புறம் உள்ள அருள்மிகு ஸ்ரீவனதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் வனதுா்க்கை அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து வனதுா்க்கை அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், கோயில் வளாகத்தில் உலக நன்மை, இயற்கை வளம் செழிக்க வேண்டி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு பிரசாதமாக அம்மனுக்கு அணிவித்த வளையல், மஞ்சள் கயிறு, தாம்பூலம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி முருகேசன் செய்திருந்தாா். திருவிளக்கு வழிபாடு ஏற்பாடுகளை சுப்புலெட்சுமி, சுபா, கனகம்மாள், மாரியப்பன், முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கீழப்பாவூா் கோயிலில் கருடாழ்வாா் ஜெயந்தி விழா
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



