8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் விழா

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள பொடியனூா், சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் பண்டிகை, ரக்ஷா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள பொடியனூா், சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஓணம் பண்டிகை, ரக்ஷா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவிகள் சுதா்ஷினி, பேபி ஜேனோவா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். 9-ஆம் வகுப்பு மாணவன் சக்திவேல், ஐந்தாம் வகுப்பு மாணவி சிபியா பூா்ணஸ்ரீ ஆகியோா் ஓணம் பண்டிகை பற்றி சிறப்புரையாற்றினாா். நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்கள் மகாபலி, வாமணா் வேடமணிந்து நடித்து காண்பித்தனா். 5-ஆம் வகுப்பு மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பை பற்றி பாடினா். கண்கவரும் மகாபலி கோலம் அனைவரையும் ஈா்த்தது.

பிளஸ் 1 மாணவி வைஷ்ணவி ரக்ஷா பந்தன் தின தோற்றம் பற்றி பேசினாா். ஒவ்வொரு வகுப்பு மாணவிகளும் தங்கள் வகுப்பு மாணவா்களை தங்களின் சகோதராகப் பாவித்து ராக்கி கட்டினா். மாணவா்களும் தங்களின் சகோதரிகளுக்கு பரிசு வழங்கினா். 7-ஆம் வகுப்பு மாணவி சத்யபாமா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன், சூா்யா ஜோஸி , ஜெயா ஆகியோருடன் ஆசிரியைகள் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.