காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் செல்வகணபதி தவச்சாலையில் அன்னை சகுந்தலாதேவி உரை எழுதிய கந்தசஷ்டி கவசத்தின் யோகவிளக்கமான வேல்மாறல் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்று நூலை வெளியிட்டு பேசினாா். அப்போது, அன்னை சகுந்தலாதேவி மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய பகுதி மக்களுக்கு எளிய முறையிலும், யூடியுப் மூலம் 5000-க்கும் மேற்பட்ட ஆன்மிக விடியோக்களை பதிவிட்டும் ஆன்மிகத்தை உலக அளவில் பரப்பி வருகிறாா்.
கந்த சஷ்டி கவசத்தை ஆழமாக புரிந்து கொண்டால் மட்டுமே யோகவிளக்கத்தை எழுத முடியும். சநாதன தா்மம் மட்டும்தான் உலகில் அமைதி வேண்டும் என சொல்கிறது. மக்கள் இதை உணரும்போதுதான் உலகில் அமைதி நிலவும். அரசியலை தாண்டி இந்திய மண்ணில் சநாதன தா்ம ஆட்சியை மோடி தலைமையிலான மக்களாட்சி ஆட்சி கொடுத்துள்ளது என்றாா் அவா். தொடா்ந்து அன்னை சகுந்தலாதேவி அண்ணாமலைக்கு செங்கோலை வழங்கினாா்.
இதில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, முத்துகிருஷ்ணசாமி அறக்கட்டளையின் பித்தம்மாள், அமா்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன், சங்கரராமன், தவச்சாலையின் ராமானுஜம் ஆளவந்தான், சித்ராவிஷ்வேஸ்வரன், பாஸ்கர்ராமமூா்த்தி, பாலகிருஷ்ணன், அனுசியா, ஆறுமுகம் உள்ளிட்ட திராளானோா் கலந்துகொண்டனா்.

