வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முன்பு திமுக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் பழனி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கனகராஜ் தலைமை வகித்தாா். இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:
பழனியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து பழனியை மாவட்டமாக அறிவிக்கும்.
திமுக ஆட்சியில் குடமுழுக்கு, கோயில் சீரமைப்புக்கு இதுவரை ரூ.82 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதாகக் கூறிய திமுக அரசு, ஒரு செங்கல்லைகூட வைக்கவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

ஒசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது இலக்கு: ஒசூா் அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ணா ரெட்டி
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


