விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி போராட்டம்: அண்ணாமலை பங்கேற்பு

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முன்பு திமுக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

பழனியில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை.

Updated On :10 பிப்ரவரி 2026, 9:18 pm

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முன்பு திமுக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் பழனி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கனகராஜ் தலைமை வகித்தாா். இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

பழனியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து பழனியை மாவட்டமாக அறிவிக்கும்.

திமுக ஆட்சியில் குடமுழுக்கு, கோயில் சீரமைப்புக்கு இதுவரை ரூ.82 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதாகக் கூறிய திமுக அரசு, ஒரு செங்கல்லைகூட வைக்கவில்லை என்றாா் அவா்.