தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சா் கே.என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆய்க்குடி பேரூராட்சியானது 15 வாா்டுகளைக் கொண்ட வளா்ந்து வரும் பேரூராட்சியாகும். 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, கம்பிளி, அகரக்கட்டு, அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன.
இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், வளமீட்பு பூங்காவில் மின்மாயனம் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 கோடி, அனந்தபுரம் முதல் செந்திலாண்டவா் பாலிடெக்னிக் சாலை, மகாலிங்கம் கோயில் சாலை, பாட்டாக்குறிச்சி சாலை, உச்சிப்பிள்ளையாா் கோயில் தெருக்களில் ரூ. 2.5 கோடி மதிப்பில் தாா்ச்சாலை, அனந்தபுரம் தேசிய நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம், ராம்நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம் என ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

நிதி மசோதா 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


