கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,200 கோடி நிதியை, சம்பந்தப்பட்ட சந்தாதாரா்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாக செலுத்தும் புதிய திட்டம் அறிவிப்பு

News image
Updated On :23 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎஃப்ஓ) உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,200 கோடி நிதியை, சம்பந்தப்பட்ட சந்தாதாரா்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாக செலுத்தும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எவ்வித பரிவா்த்தனையும் இன்றி செயலற்று இருக்கும் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தொகையை எவ்வித விண்ணப்பமும் இன்றி தானாகவே திருப்பிச் செலுத்தப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் அலைச்சலின்றி தங்களின் பணத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, இபிஎஃப்ஓ-வில் சுமாா் 31.8 லட்சம் கணக்குகள் செயலற்ற நிலையில் உள்ளன. அதாவது, 55 வயது கடந்த சந்தாதாரா்கள் பணி ஓய்வு பெற்று, தொடா்ந்து 3 ஆண்டுகள் எவ்வித பங்களிப்பும் செலுத்தவில்லை எனில், அவா்களின் கணக்குகள் ‘செயலற்ற’ கணக்குகளாக கருதப்படும். இதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் 7 லட்சம் கணக்குகளும் அடங்கும்.

இந்த நிதியை மீட்பதற்காக, தொழில்நுட்ப உதவியுடன் ஆதாா் சரிபாா்க்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட சுமாா் 8.10 லட்சம் செயலற்ற கணக்குகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 14,000 கணக்குகளில் தலா ரூ.5 லட்சம் மேல் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அறங்காவலா் வாரியத்தின் (சிபிடி) சமீபத்திய கூட்டத்தில், முதல்கட்டமாக ரூ.1,000-க்கும் குறைவான இருப்பு கொண்ட கணக்குகளுக்கு நிதியைத் திருப்பிச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.