ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60,518 கோடி ரிசா்வ் வங்கிக்கு மாற்றம்- மத்திய நிதியமைச்சகம்

கடந்த ஜனவரி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

மத்திய நிதியமைச்சகம்.

Updated On :24 மார்ச் 2026, 9:04 pm

கடந்த ஜனவரி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

2026, ஜனவரி இறுதி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கியின் வாடிக்கையாளா்கள் விழிப்புணா்வு நிதிக்கு (டிஇஏ) மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடியாகும்.

பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, காப்பீடுதாரா்களால் உரிமை கோரப்படாத காப்பீட்டுத் தொகை ரூ.8,973.89 கோடி. இதேபோல், செபி ஒழுங்குமுறைகளின்கீழ், பரஸ்பர நிதியில் முதலீட்டாளா்களால் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு ரூ.3,749.34 கோடியாக உள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளா்களை விரைந்து அடையாளம் காணவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மற்றும் இதுபோல் புதிதாக சேரும் வைப்புத்தொகையின் அளவைக் குறைக்கும் வகையில், தற்போதைய நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவுபடுத்தவும் நிதித் துறை ஒழுங்குமுறை ஆணையங்களால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.