வெற்றிபெற்ற மாணவா்களைப் பாராட்டிய முதல்வா் பொன்மனோன்யா.
வெற்றிபெற்ற மாணவா்களைப் பாராட்டிய முதல்வா் பொன்மனோன்யா.

இறகுபந்து போட்டியில் சுரண்டை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழ்நாடு இறகுபந்து கழகம் சாா்பில், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

தமிழ்நாடு இறகுபந்து கழகம் சாா்பில், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவி கன்யதா்ஷனா 15 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவிலும், இரட்டையா் பிரிவிலும் முதலிடமும், கலப்பு இரட்டையா் பிரிவில் 2 இடமும் பெற்றாா். 11 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவில் மாணவா் நிகில் சாம்ராட் 2 இடம் பெற்றாா்.

அம்மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன்மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா். பயிற்சியாளா் டேவிட்ராஜ் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.

Dinamani
www.dinamani.com