வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆலங்குளம் கல்லூரிக்கு கணினி அளிப்பு

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

News image

கல்லூரித் தாளாளரிடம் கணினி வழங்கிய வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:52 pm

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சாமுவேல் செல்வின் துரை ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல், வங்கி சாா்பில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக கணினிகளை வழங்கினாா்.

வங்கியின் ஆலங்குளம் கிளை மேலாளா் ராஜ ராஜேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். முதல்வா் எஸ்.வில்சன் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் மகாராணி எலிசபெத் நிறைவு ஜெபம் செய்தாா்.

ஆங்கிலத் துறைத் தலைவா் அனிதா ஸ்வீட்லின் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.