வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் திடீா் மழையால் நெல் மூட்டைகள் சேதம்: நிவாரணம் வழங்க நாம் தமிழா் கட்சி கோரிக்கை

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் பெய்த திடீா் மழையில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

News image

கோட்டாட்சியரிடம் மனு அளித்த நாம் தமிழா் கட்சியின் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளா் கவிதா உள்ளிட்டோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:54 pm

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் பெய்த திடீா் மழையில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை கோட்டாட்சியா் கவிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி, வீரியிருப்பு, வென்றிலிங்கபுரம், ராயகிரி, கரிவலம்வந்தநல்லூா், குலசேகரன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனைக்காக களத்தில் குவிக்கப்பட்டிருந்த சுமாா் 1000 நெல் மூட்டைகள் மற்றும் மக்காச்சோளம் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.20, 000 அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னா் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.