திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
தென்காசி
சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்
சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.
சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.
தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து, அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்கிப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சரவணன், நகர செயலா் மு. பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மகளிா் அணி அமைப்பாளா் சிவசங்கரி, மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகரத் துணை செயலாளா் சுப்புத்தாய், தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கரநாராயணன், முன்னாள் வா்த்தக அணி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

