வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்து விலங்குகளை கொல்ல முயன்ாக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்து விலங்குகளை கொல்ல முயன்ாக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன்உத்தரவின் பேரில் புளியங்குடி வனச்சரகா் ஆறுமுகம் தலைமையில் வனவா்கள் சரண்யா, திருமலைக்குமாா், வனக் காவலா்கள் மரியஜான்சி, சிஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு யானைகளை விரட்டும் பணிக்காக திருமலாபுரம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, அப்பகுதியில் விதிமுறை மீறி மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாம். இதுதொடா்பாக, ராயகிரி அம்மன் சந்நிதி தெருவை சோ்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமாா்(46) என்பவருக்கு வனத்துறையினா் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனா்.