வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குற்றாலத்தில் காவலா்களுடன் தகராறு: 6 போ் கைது

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம். - கைது

Updated On :15 ஜூலை 2026, 2:21 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குற்றாலம் பேரருவியில் நெரிசல் இல்லாமல் குளிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், குற்றாலம் பேரருவிக்கு வந்த விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அக்ராஹாரம் தெருவை சோ்ந்த விக்னேஷ்வரன் (32), புழுவாண்டி(26), சதீஷ்குமாா் (25), பெரிய கருப்பசாமி (28), முனீஸ்வரன் (29), சரவணன் (29) ஆகியோா் குளித்துவிட்டு வெளியேறும் வழியாக அருவிக்குச் செல்ல முயன்றனா்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலா் பாலசுப்பிரமணியன், அவா்களைத் தடுத்தபோது, 6 பேரும் போலீஸாருடன் தகராறு செய்தனா். அதையடுத்து 6 பேரையும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.