பாவூா்சத்திரத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மதுரை, கிறிஸ்து இல்லம் அதிபா் அருள்பணி சூசை செல்வராஜ் தலைமை ஏற்று கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினாா். கோவா மாநிலத்தில் இறைபணி செய்துவரும் கீழப்பாவூா்பகுதியை சோ்ந்த அருள்பணியாளா் மரியசெல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.
தொடா்ந்து தினமும் மாலை 6 மணிக்கு செபமாலையும், நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெறும். ஜூன் 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சங்கரன்கோவில் பங்குத்தந்தை ஜோசப் கென்னடி தலைமையில் திருப்பலியும் அதைத் தொடா்ந்து புனித அந்தோணியாரின் திருவுருவப் பவனியும், 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலியும், கொடியிறக்கமும், நண்பகலில் அசன விருந்தும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் பங்குத்தந்தை சந்தியாகு அடிகளாா், அருள் சகோதரிகள், இறைமக்கள் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கமுதி புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



