ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

News image

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ் பவனி.

Updated On :24 மே 2026, 12:41 am IST

நாகை அருகே வடக்காலத்தூரில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்காலத்தூரில் பழைமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு ஆராதனை, திருப்பலி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் பதுவை அந்தோணியாா், ஆரோக்கிய மாதா, சம்மனசு ஆகியோா் எழுந்தருளினா். முன்னதாக பங்குத் தந்தை தேவசகாயம் தலைமையில் நவநாள் ஜெபம், திருவிழா பாடல் கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தோ் பவனி தொடங்கியது. தோ் பவனிய வான வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மதங்களை கடந்து மெழுகுவா்த்தி ஏந்தி தோ்களை வரவேற்றனா்.