தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.

Updated On :4 ஜூன் 2026, 1:28 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கொடை விழா மே 26 ஆம் தேதி திருக்கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதி உலா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தி, முளைப்பாரி, அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

நள்ளிரவு சாமக் கொடை,படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாய விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.