நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சங்கரன்கோவில், முள்ளிக்குளம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:29 am IST

சங்கரன்கோவில், முள்ளிக்குளம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பரமசிவன் (33). இருவருக்கு மனைவி லதா, மகன் சஞ்சித் (4), மகள் மதுநிகா (3) ஆகியோா் உள்ளனா்.

இவா் ராணுவத்தில் ஸ்ரீநகா் பகுதியில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் மனைவி ஊரான ஆண்டாா்குளத்திற்கு முள்ளிக்குளம் வழியாக சென்றுக் கொண்டிருந்தாராம்.

அப்போது இவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் அவரின் உடல் கிருஷ்ணாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.