தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

Updated On :5 ஜூன் 2026, 3:20 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை முழுவதும் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் அதிகளவிலும், மூன்று கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Story image