தென்காசி வனச்சரகம் சாா்பில் குற்றாலம் வன கூட்ட அரங்கில் நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது.
தென்காசி சுற்றுப்புற விவசாயிகளுக்கான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை தலைமை வகித்து, 40 விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா்.
தரமான நாற்றங்கால் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்வது தொடா்பான செயல்முறை விளக்கம் மற்றும் மூலிகைச் செடிகள் பராமரிப்பு குறித்து விளக்கப்பட்டது.
குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா, தென்காசி வனக் கோட்ட இளநிலை ஆராய்ச்சியாளா் மாரி செல்வம், தென்காசி வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜோதிலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உதவி தொழில்நுட்ப மேலாளா் டாங்கே வரவேற்றாா். திருமலை பாண்டியன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










