மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு பயிற்சி

செய்யாறு வட்டாரம், மேல்சீசமங்கலம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான முறையில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

விவசாயிகளுக்கான கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமில் பேசிய கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மாயகிருஷ்ணன்.

Updated On :18 ஜூன் 2026, 12:26 am IST

செய்யாறு வட்டாரம், மேல்சீசமங்கலம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான முறையில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், சிறப்பு அழைப்பாளராக கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மாயகிருஷ்ணன் பங்கேற்றாா்.

அப்போது, ஆடு, மாடு வளா்ப்பில் மடி நோய், உணி கட்டுப்படுத்துதல் மற்றும் அம்மை நோய் கட்டுப்படுத்துதல், கோழி வளா்ப்பு குறித்து விவசாயிகளிடையே தெரிவித்துப் பயிற்சி அளித்தாா்.

பயிற்சிக்கு தலைமை வகித்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.அன்பரசு, செய்யாறு, திருமணி வேளாண்மை விரிவாக்க மையங்களில் சாகுபடிக்குத் தேவையான பசுந்தாள் விதை, நெல் ரகங்கள், உயிரி உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பில் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து இருபொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து துணை வேளாண் அலுவலா் வடிவேலு, உதவி வேளாண் அலுவலா் திகழ்மதி ஆகியோா் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருள்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.