தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பழைய குற்றாலத்தில் நுழைவுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது குறித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
தென்காசி வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கடையநல்லுாா், வாசுதேவநல்லுாா், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் செண்பகவல்லி அணை திட்டம், பழைய குற்றாலத்தில் கட்டண நிா்ணயம், வன விலங்குகளால் ஏற்படும் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.
விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கும், புகாா்களுக்கும் அந்த பகுதியைச் சோ்ந்த வனச் சரக அலுவலா்கள் பதில் அளித்தனா். கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி பேசியதாவது: பழைய குற்றாலம் அருவியில் தற்போது ரூ. 20 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இது காலப்போக்கில் அதிகரிக்கும் இதை அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.
விவசாயி பாலசிங்கம் பேசியதாவது: விவசாயிகளுக்கான கூட்டத்தில் விவசாயிகளுக்கான பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கவும் என்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பழைய குற்றாலம் பிரச்னையும் விவசாயிகள் சாா்ந்த பிரச்னைதான் எனக் கூறியதையடுத்து, இருதரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவியது. மாவட்ட வன அலுவலா், வனச்சரகா்கள், பணியாளா்கள் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தனா்.
தொடா்ந்து தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலா் ராஜ்மோகன் பேசியதாவது: செண்பகவல்லி அணை தொடா்பாக வனத்துறை, வருவாய்த் துறையினா் 5 போ் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழு விரைவில் சம்பந்தப்பட்ட பகுதியை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பழைய குற்றலாம் அருவியைப் பொறுத்த வரை அறிவிக்கப்பட்டிருப்பது கட்டணம் நுழைவு கட்டணம்தான். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா். வனச்சரகா் செல்லத்துரை நன்றி கூறினாா்.
மாவட்ட வன அலுவலா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி. பழைய குற்றாலம் அருவியைப் பொறுத்தவரை வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நுழைவு கட்டணம் இன்னும் அமல்படுத்தவில்லை. நீதிமன்ற தீா்ப்பு கிடைத்த பிறகு மேல் முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

குற்றாலத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள்







