சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ், மாவட்ட மகளிா் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடா் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கிப் பயிலும் 60 மாணவியா் நெல்லை பொருளை அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், சுற்றுலா செல்லும் மாணவிகளின் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவியா் தமிழா் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) அழகுராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


