விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு 60 மாணவியா் கல்வி சுற்றுலா

News image
வாகனத்தைக் கொடியசைத்து அனுப்பிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :11 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ், மாவட்ட மகளிா் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடா் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கிப் பயிலும் 60 மாணவியா் நெல்லை பொருளை அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், சுற்றுலா செல்லும் மாணவிகளின் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவியா் தமிழா் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) அழகுராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.