சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ், மாவட்ட மகளிா் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடா் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கிப் பயிலும் 60 மாணவியா் நெல்லை பொருளை அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை ஒருநாள் கல்வி சுற்றுலா சென்றனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், சுற்றுலா செல்லும் மாணவிகளின் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவியா் தமிழா் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) அழகுராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

குற்றாலத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


