சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
ஆவரந்தாகுளத்து கரையில் பழுதடைந்து காணப்படும் சாலை.
Updated On :11 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குள்பட்ட, சிவநாடானூா் ஊராட்சி, ராமச்சந்திரபட்டினம் - மடத்தூா் வழியாக முத்துமாலைபுரத்திற்கு செல்லும் ஆவரந்தாகுளத்து கரையில், சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்தச் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். எனவே, கள ஆய்வு செய்து பழுதடைந்த ஆவரந்தாகுளத்து கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.