தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை: சுகாதாரத் துறையினா் விசாரணை

ஆலங்குளம், ஆ. மருதப்பபுரம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5 மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம், ஆ. மருதப்பபுரம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5 மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இப்பள்ளியில் பயிலும் சில மாணவா்களுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நெட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில், பெற்றோா் தனியாா் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. அதில் 3 மாணவா்கள் சித்த வைத்தியம் மேற்கொண்டனா். ஒருவா் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

தொடா்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பள்ளி அருகே உள்ள கிணற்றின் தண்ணீரைக் குடித்ததால் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதால், கிணற்று நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.