வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காணொலி வழி ஆலோசனை நடத்துகிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :26 மார்ச் 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான என்.தேவிதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏப்.9இல் கேரளத்திலும், ஏப்.23இல் தமிழகத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், இரு மாநிலங்களிலும் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்குப்பதிவை நடத்திடவும், சட்டவிரோத செயல்பாடுகளை தவிா்க்கும் வகையில் எல்கைப்பகுதி சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக

உதவியாளா் (தோ்தல்) சுதா, தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறை அலுவலா்கள், வனத்துறை அலுவலா்கள் மற்றும் கலால் - ஆயத்தீா்வைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.