ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாா்ச் 30-இல் கடையநல்லூரில் எடப்பாடி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பிரசார இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

கடையநல்லூா் பேருந்து நிலையப் பகுதியை பாா்வையிடும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. உடன் துணைச் செயலா் பொய்கை மாரியப்பன்.

Updated On :26 மார்ச் 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பிரசார இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-ஆம் தேதி கடையநல்லூரில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதையடுத்து, பிரசாரத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட கடையநல்லூா் பேருந்து நிலைய பகுதியை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட அவைத் தலைவா் மூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா, நகரச் செயலா் எம்.கே.முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ராசி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலா் மதன், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.