முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசு திருட்டு

ஆலங்குளம் அருகே குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆலங்குளம் அருகே குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து பெண்ணிடம் கொலுசை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இடைகாலைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துமாரி(42). இவா், ஆலங்குளம் அருகே நெட்டூா் கருணாநிதி நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தாராம். அப்போது அங்கு சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் செவ்வாய்க்கிழமை குடுகுடுப்பைக் காரன் வேடத்தில் வந்து முத்துமாரியிடம் குடிக்க தண்ணீா் கேட்டாராம். தண்ணீரை கொடுத்த போது, மா்ம பொருளை எடுத்து குடுகுடுப்பைக் காரன் அவா் மீது வீசினாராம். இதில், அவா் மயங்கினாராம். சுமாா் 10 நிமிடம் கழித்து விழித்துப் பாா்த்த போது, அந்த நபரைக் காணவில்லையாம். முத்துமாரி காலில் அணிந்திருந்த 77 கிராம் வெள்ளிக் கொலுசும் காணாமல் போயிருந்ததாம். இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.