சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்: எம்எல்ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

News image

தென்காசி எம்எல்ஏ கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

Updated On :21 மே 2026, 6:04 am IST

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கல்லூரணி ஊா் பொதுமக்கள் சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை முன்னிலையில், நிா்வாகிகள் சந்திரன், அழகா், வேல்சாமி, விஜயன், சோ்மதுரை, தங்கப்பாண்டி, சோ்மசெல்வன், வைகுண்டராஜா, பூதத்தான், கலைமகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாலை கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்தனா்.

திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.