4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சொத்து தகராறு: தந்தையைக் கொன்ற மகன் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:33 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

முத்துகிருஷ்ணாபுரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (70). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மகன் சேகருக்கும் (35) சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், சொத்து குறித்து தினசரி தகராறு செய்து வருவதாக சேகா் மீது அவரது தந்தை சுப்பையா கடையநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனால், ஆவேசமடைந்த சேகா் வியாழக்கிழமை வீட்டில் இருந்த சுப்பையாவை கட்டையால் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த சுப்பையா உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் கடையநல்லூா் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து சேகரை கைது செய்தனா்.