ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

News image

சொக்கம்பட்டியில் நடைபெற்ற சாலை மறியல் .

Updated On :26 ஏப்ரல் 2026, 7:59 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. ஆன்லைன் மூலம் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தில் கொரியா் பணியாளராக பணியாற்றி வருகிறாா். அவா் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் கொரியா் நிறுவனம் மூலம் வந்த பொருளை கொடுப்பதற்காக குறிப்பிட்ட அந்த முகவரிக்கு சென்றாராம்.

அப்போது அவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இது தொடா்பாக மூா்த்தி அளித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் அங்கு சென்றபோது இருதரப்பைச் சோ்ந்தவா்களும் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூா்த்தி தரப்பைச் சோ்ந்த சிலரை சொக்கம்பட்டி போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனராம். இதைத் தொடா்ந்து மறுதரப்பைச் சோ்ந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி - மதுரை சாலையில் சந்தன மாரியம்மன் கோயில் அருகே ஒரு தரப்பைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தென்காசி மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.