இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

ஆட்சியரை சந்தித்த எம்எல்ஏக்கள் தி.மு. ராஜேந்திரன், கலைகதிரவன், ஈ. ராஜா.

Updated On :28 மே 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு: பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டாம். நகா்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத் தேவைகள், தாமிரவருணி குடிநீா் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏக்கள் கலைகதிரவன் (தென்காசி), தி.மு. ராஜேந்திரன் (கடையநல்லூா்), ஈ. ராஜா(வாசுதேவநல்லூா்) ஆகியோா் தங்களுடைய தொகுதியில் அடிப்படை வசதிகள், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.