சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

ஆட்சியரை சந்தித்த எம்எல்ஏக்கள் தி.மு. ராஜேந்திரன், கலைகதிரவன், ஈ. ராஜா.

Updated On :28 மே 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு: பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டாம். நகா்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத் தேவைகள், தாமிரவருணி குடிநீா் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏக்கள் கலைகதிரவன் (தென்காசி), தி.மு. ராஜேந்திரன் (கடையநல்லூா்), ஈ. ராஜா(வாசுதேவநல்லூா்) ஆகியோா் தங்களுடைய தொகுதியில் அடிப்படை வசதிகள், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.