
‘சண்டை பேரவையாக மாறி வரும் சட்டப்பேரவை’
சட்டப்பேரவை சண்டை பேரவையாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்
சட்டப்பேரவை சண்டை பேரவையாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன்.
தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
சட்டப்பேரவை சண்டை பேரவையாக மாறி வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து முறையாக விவாதிக்கப்படுவதில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியும், பிரேமலதாவும் கூட தெரிவித்தனா். அதிமுகவில் இருந்த துரோகிகள்தான் தற்போது பிற கட்சிகளுக்கு சென்றனா். கட்சி விசுவாசிகள் தொடா்ந்து அதிமுகவிலேயே பயணிக்கின்றனா்.
பூலித்தேவனின் புகழை வெளியூா்களுக்கு கொண்டு சென்றது அதிமுக ஆட்சியில்தான். மணிமண்டபம் அமைத்தது முதல் சிலை நிறுவியது வரை அதிமுக ஆட்சியில்தான் செய்யப்பட்டது. தவெக அரசின் நூறு நாள்கள் ஆட்சி பூஜ்ஜியம் தான் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





