கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு

நான்குனேரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
Updated on
1 min read

நான்குனேரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.

 நான்குனேரி அருகே உள்ள ஏமன்குளத்தை அடுத்த சகாயநகரைச் சேர்ந்தவர் அந்தோனி விக்டர் மகன் அந்தோனி வெனிஸ் (14).  திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வந்ததும், தனது தம்பியை அழைத்துக் கொண்டு நாயைக் குளிப்பாட்டுவதற்காக ஊரின் அருகே உள்ள கிணற்றுக்குச் சென்றாராம். கிணற்றின் படியில் அமர்ந்து நாயை குளிப்பாட்டியபோது, திடீரென அந்தோனி வெனிஸ் தடுமாறி கிணற்றில் விழுந்தாராம். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தாராம்.  இதைப் பார்த்த அவரது தம்பி வீட்டுக்கு ஓடிவந்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாராம்.

உடனே பெற்றோர் கிணற்றுக்கு வருவதற்குள் அந்தோனி வெனிஸ் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இது தொடர்பாக நான்குனேரி காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் அந்தோனி வெனிஸ் சடலத்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com