தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அரசு ஊழியர்கள் பங்கேற்கும் மாநில வாலிபால் போட்டி தொடக்கம்

அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் 2015-16ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் மாநில அளவிலான வாலிபால் போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (மார்ச் 3) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், தருமபுரி, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், நீலகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 23 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே நாக் - அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டியை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தொடக்கிவைத்தார். வணிகவரித் துறை இணை ஆணையர் கே.எம். கார்த்திகேயினி, திருநெல்வேலி வாலிபால் கழக மாவட்டச் செயலர் என். ரவீந்திரன், பாளையங்கோட்டை விளையாட்டு விடுதி மேலாளர் பிராங்க்பால் ஜெயசீலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முதல்நாள் போட்டியாக ஆண்கள் பிரிவில், ஈரோடு - தருமபுரி அணிகள் மோதின. இதில், தருமபுரி அணி வென்றது.

திருவாரூர் - நாகப்பட்டினம் அணிகள் மோதியதில் நாகப்பட்டினம் அணி வென்றது. தூத்துக்குடி - திருநெல்வேலி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி அணி வென்றது.

கன்னியாகுமரி - திண்டுக்கல் அணிகள் மோதியதில் திண்டுக்கல் அணி வென்றது. தொடர்ந்து சனிக்கிழமை வரை போட்டிகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.